உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . .
கீர்த்தி, குடித்துக் கொண்டிருந்த காபி கொப்பளிக்க பலமாக சிரித்து விட்டு திருப்பிக் கேட்டாள் "உனக்கு தெரியாதா ?"
தெரியும், இல்ல மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களா ?
ம்ம்.
எப்பிடி எதிர்பார்க்கிறாங்க உங்க வீட்ல, ஜாதி ஜாதகம் எல்லாம் பார்ப்பாங்களா? இல்ல உங்க ரிலேசன் ல பார்க்குறாங்களா?
(நித்யா கொஞ்சம் சீரியசாகவே அவளிடம் கேட்டாள்)
நல்ல பையன், நம்பிக்கையான குடும்பமா இருந்தா போதும்.
கண்டிப்பா வெஜிடேரியனா இருக்கணும் அவ்வளவு தான்.
என்ன ஆச்சு, ஐடி டவுன் ஆனதால தொழில மாத்தி கிட்டியா ?
இல்ல சும்மா தான் கேட்டேன்
பொய் சொல்லாத, என்ன மேட்டர்னு சொல்லு.
இல்ல விஜய் தான் இந்த விபரமெல்லாம் கேட்டாரு.
விஜயா ? (அவள் தொனியில் ஆச்சர்யம் நிரம்பி வழிந்தது)
உனக்கு ஏதாவது விஜய் மேல . . . . .? (என்று லேசாக இழுத்தாள் நித்யா)
அப்படி ஒன்னும் கிடையாது (சட்டென்று பதில் வந்தது கீர்த்தியிடமிருந்து)
உன் கிட்ட புரோபோஸ் பண்ணா ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் சொல்லிடாத? நானே கேட்டேன் என்ன விஷயம்னு, உன் கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாரு.
"நான் கேட்டதா சொல்ல வேணாம், நீங்களா கேக்குற மாதிரி கேட்டு சொல்லுங்க . . . . " ன்னு சொன்னாரு. அப்புறம் இந்த விஷயம் உனக்கு தெரியாத மாதிரியே காட்டிக்க. . .
ஹர்ட் பண்ற மாதிரி ஒன்னும் சொல்ல மாட்டேன். அவரும் டிசண்டா தான் கேப்பாரு, நானும் டிசண்டா முடியாது ன்னு சொல்ல போறேன், அவ்ளோதான். என்று கண்களை சிமிட்டியவாரே அவளுடைய வழக்கமான புன்னகையை உதிர்த்தாள் கீர்த்தி.
------------------- மறு நாள் -------------------
மெசஞ்சரில் விஜயும் கீர்த்தியும்
Vijay : Coffee ?
Keerthi : Its 7 now, I am going to leave now.
Vijay : I want to talk to to something, please come
Keerthi : k, can we start ?
Vijay : okye. . . .
விஜய்யும் கீர்த்தியும் ஒன்றாக கிளம்பியதை நித்யா கவனித்தாள்.
pantry காலியாக இருந்தது
எதற்காக விஜய் அழைத்திருக்கலாம் என்று முன்பே யூகித்திருந்ததால், அவளுடைய பதில் தயாராகவே இருந்தது. அவன் முதலில் பேசட்டும் என்று அமைதியாகவே இருந்தாள் கீர்த்தி. விஜையே ஆரம்பித்தான்,
அப்புறம் மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கு.
(லேசாக புன்னகைத்தாள்)
இல்ல, எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான், உங்களுக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம் இருக்கும். குடும்பமும் நல்ல குடும்பம். என்ன சொல்றிங்க? உங்க வீட்லயும், அவங்க வீட்லயும் பேசி பார்க்கலாமா?
(எவ்ளோ பெரிய bug, issue வந்தாலும் அழகாக அதை சரி செய்து client யும் manager யும் சமாளித்து விடும் அவன் தந்திரம் இங்கும் வேலை செய்வதை உணர்ந்தாள்)
எங்க வீட்ல வெஜிடேரியன் ல தான் பார்க்குறாங்க?
அவனும் சைவம் தான்.
(சற்றே குழப்ப மடைந்தாள், வெள்ளிக் கிழமைன்னா பிரியாணி சாப்பிடற ஆளாச்சே விஜய், கொஞ்சம் கலவரம் நிறைந்த கண்களுடனும் மனதுடனும் அவனை பார்த்தாள்)
இல்ல என் பிரண்டுக்கு பொண்ணு பாக்குறாங்க, உங்களுக்கும் அவனுக்கும் பொருத்தமா இருக்கும் ன்னு தோணிச்சி, அதான் கேட்டேன்.
உங்க பிரண்டு என்ன லவ் பண்றாரா?
இல்ல, அவன் உங்கள பார்த்தது கூட இல்ல. . . .
(அவள் எதையோ எதிர் பார்த்து பதில் சொல்ல தயாராயிருக்க, அவனோ வித்தியாசமாய் ஒன்றை சொல்ல அவளது குழப்பங்கள் இன்னும் அதிகமாகின. கண்களை மூடி நடந்ததை மெல்ல அசை போட்டாள். எல்லா விஷயங்களும் அவளுக்கு தெளிவாய் புரிந்தவுடன் கேட்டாள். . . )
உங்க பிரண்டுக்கு நீங்க பொண்ணு பாக்குறீங்க?
மெதுவாக தலை அசைத்தான் ஆமாம் என்று.
ஏன்? என்னை?
(அந்தச் சூழ்நிலையில், மனத்தில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் இரண்டு வார்த்தைகள் மட்டும் அவளிடமிருந்து வந்தது, எல்லா கேள்விகளையும் சுமந்து)
உங்க way of thinking அப்புறம் behaviour எல்லாம் அவன மாதிரியும் அவங்க family மாதிரியே இருக்கு, அதான் உங்களுக்கும் அவனுக்கும் பொருத்தமா இருக்கும். அவன்கிட்ட உங்கள பத்தியும் இந்த விஷயத்த பத்தியும் சொன்னேன், உங்க கிட்ட பேசிட்டு சொல்ல சொன்னான். யோசிச்சி பாருங்க, உங்க அப்பா அம்மா கிட்ட பேசுங்க அப்புறம் சொல்லுங்க. . . . . .
சரி. . . (கொஞ்சம் நிதானித்து விட்டு பிறகு கேட்டாள். . . .)
உங்க பிரண்டு ஸ்மார்ட்டா இருப்பாரா ?
ஆங். . . ஏன் அளவுக்கு இல்லேன்னாலும், கொஞ்சம் சுமாரா இருப்பான். (என்று நக்கலாக சிரித்தான்)
------------------- இரவு 11.30 மணி -------------------
Nithya calling. . . . .
10 மிஸ்டு கால் ஆகிவிட்டது, பாவம் என்று பதினோராவது முறையாக வந்த அழைப்பை அட்டன் செய்தான்.
என்ன சார், பிரண்டுக்கு பொண்ணு பார்த்தாச்சா? பெரிய மனுஷனா ஆயிட்டிங்க. . .
ம்ம். . . .
இத என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல? நேத்து ராத்திரி துக்கமே இல்ல. நீங்க கீர்த்திய லவ் பண்றிங்கன்னு நினைச்சு பயந்து போயிட்டேன். இப்ப அவளுக்கு கால் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டா, அப்பா அம்மா கிட்ட பேசிட்டு தான் சொல்லணும், எனக்கு 90% ஒக்கே ன்னு சொன்னா. எனக்கு உயிரே போயிடுச்சு. அப்புறம் தான் எல்லாத்தையும் சொன்னா.
(பட பட வென்று அவளிடமிருந்து வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தது அவளிடமிருந்து. லேசான புன்னகையுடன் மறு முனையில் கேட்டுக் கொண்டிருந்தான் விஜய்.)
ஏன் இப்படி சஸ்பென்ஸ் வச்சிங்க, சொல்லுங்க என்று முடித்தாள்.
நீங்க ஏன் நேத்து ராத்திரி துங்கல?
நான் கீர்த்திய லவ் பண்றதா நினைச்சு நீங்க ஏன் பயந்தீங்க?
கீர்த்தி ஒகே ன்னு சொன்னதும், உங்களுக்கு ஏன் உயிர் போற மாதிரி இருந்துச்சு ?
அவனுடைய கேள்விகளுக்கும் அவளுடைய செய்ல்களுக்கும் விடை அப்போது தான் அவளுக்கே புரிந்தது (நம்மை போலவே). வசமாக மாட்டிக் கொண்ட களவானி யைப் போல் ஆகிவிட்டது அவளின் நிலை. மெளனத்தை மட்டுமே பதிலாய் தர முடிந்தது அவளால்.
இப்ப புரியுதா, நான் ஏன் சஸ்பென்ஸ் வச்சேன்னு?
சரி,
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா . . . .?
(ஆரம்பம்)
Thursday, March 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)

6 திட்டுகளும் குட்டுகளும்:
சாரி எனக்கு கல்யாணம் ஆகலை :)
தலைவா, எங்கேயோ போயிட்டீங்க! Good one.
ஆமாம் உங்க பிரண்ட்ஸ் எல்லாம் என்னா கேட்டதாக சொன்னீங்க:))))
கதை ஓகே!
VIKNESHWARAN said...
சாரி எனக்கு கல்யாணம் ஆகலை :)
அப்ப பொண்ணு பார்க்க வேண்டியது தான்.
நன்றி மெளலி.
குசும்பன் said...
ஆமாம் உங்க பிரண்ட்ஸ் எல்லாம் என்னா கேட்டதாக சொன்னீங்க:))))
இந்த கதைல என்ன இருக்குன்னு கேட்டாங்க :-((
Post a Comment